பாட்டியும் .... கதையும்.... நானும்
ஏழு மலையும் ஏழு கடலும்
நெருப்பு பாம்பு சிங்கமும் தாண்டி
தங்கக் கூண்டின் கிளியைத் தூக்கி
கடத்தி எடுத்து வந்தேன் பலமுறை
அரக்கனின் உயிரதன் கழுத்தில் இருக்க
கழுத்தை திருகிக் கொல்லச் சொன்னாள்
பாட்டி அசந்து சற்றே திரும்ப
கூண்டின் கதவை நானும் திறக்க
கிளியும் நன்றியாய் கத்திப் பறந்தது
பதறி அலறிப் பாட்டியும் வந்திட
எழுந்து ஓடி முகத்தைக் கழுவி
நிசப்த அறையில் நானாய்ச் சிரித்தேன்
நாளையும் பாட்டி அதையே சொல்வாள்
நானும் அதையே மறுபடி செய்திட....


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home